Sunday, July 19, 2009

430

ஓம் சத்குரவே சரணம்

குருதேவர் சொன்னார், "எல்லாவற்றிற்கும் மேலாக கடவுளிடம் விசுவாசத்துடன் இரு. அதிக நேரத்தை கடவுளை நாடுவதிலேயே பயன்படுத்து. அவசியமற்ற சிறிய கடமைகளை நோக்கி மிகவும் அலற்றிக் கொள்ளாதே. அவை ஒருநாள் உன்னைவிட்டு எப்படியும் நீங்கித் தானே போகவிருக்கின்றன. அச் சிறிய வேலைகள் உன்னை அதிக மோகத்துள் சிக்க வைக்கும் வலை. அவைகளை செய்துமுடித்தாலே பயனடைந்ததாகி விடும் என்று கருதாதே. அனுதினமும் தியானத்தில் கடவுளைச் சந்திக்க முயற்சிப்பதைத் தவிர வேறெதுவும் முக்கியமே அல்ல."

ஓம் தத் ஸத்
பிரம்மார்ப்பணமஸ்து.

No comments:

Post a Comment