ஓம் ஸ்ரீ சத்குரவே சரணம்
அடிக்கடி சந்தேகப்படும் ஒரு சீடனைப் பார்த்து குருதேவர் சொன்னார்,"நீ உன் சந்தேகங்களிலேயே உழன்று கொண்டிருக்காதே, இல்லையேல் கடவுள் உன்னை இங்கு நீண்டநாள் வைத்திருக்க மாட்டார்.
நிறைய பேர் இங்கு அற்புதங்களை எதிர்பார்த்து வருகிறார்கள். ஆனால், கடவுளை உணர்ந்தவர்கள், கடவுளின் ஆணைப்படி அன்றி தங்கள் சக்தியை அநாவசியமாக வெளியே காட்ட மாட்டார்கள். பொதுமக்கள் அந்த மகான்களின் முழுப்பணிவில் இருக்கும் உன்னதமான அதி அற்புதத்தை காணுவதில்லை!
நான் பொது இடங்களில் அற்புதம் செய்வித்தால் நிறையக் கூட்டம் என்னைப் பின்பற்ற வந்து சேரும். ஆனால், அதுவல்ல கடவுளின் விருப்பம்."
#Conversations with Yogananda 324 by Swami Kriyananda
Tamil Translation: PHD (D.l. Sivakumar)
ஓம் தத் ஸத்
பிரம்மார்ப்பணமஸ்து.
No comments:
Post a Comment