ஓம் சத்குரவே சரணம்
ஒரு பெண் சீடர் மற்றொருவரை நேசமின்றி நடத்தினார். குருதேவர் அப்பெண் சீடரிடம் சொன்னார்,
"இப்படி நீ மற்றவர்களிடம் நடந்து கொண்டால், நீ கடவுளை உண்மையாக நேசிக்க முடியாது. கடவுள் எல்லாவற்றினில் உள்ளும் இருக்கிறார். நீ பிறர் அன்பைப் பெற முடியவில்லையெனில் நீ அவர் அன்பைப் பெற முடியாது.
நீ கடவுளை உன் வாழ்வில் முதல் ஸ்தானத்தில் வைக்க வேண்டும், ஆனால் மற்றவர்கள் மூலமும் அவரே தான் பற்பல விதமாகத் தோன்றுகிறார் என்றும் நீ கருத வேண்டும்.
நீ எல்லோர் மூலமும் கடவுளை நேசிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான் உன்னைச் சுற்றியுள்ளோர் உன் வாழ்க்கையின் அங்கமாக ஆகியுள்ளார்கள்."
#Conversations with Yogananda 367 by Swami Kriyananda
Tamil Translation: PHD (D.l. Sivakumar)
ஓம் தத் ஸத்
பிரம்மார்ப்பணமஸ்து.
பிரம்மார்ப்பணமஸ்து.

No comments:
Post a Comment