Tuesday, September 22, 2015

027


ஓம் சத்குரவே சரணம்


அமெரிக்காவில் உள்ள மதநிறுவன வழக்கங்களைப் பற்றி குருதேவர்,

"இங்குள்ள கிறிஸ்தவ மத சம்பிரதாயங்கள் சீர்படுத்தப் பட வேண்டும். இங்கு 'மினிஸ்டர்'களுக்கு புத்திபூர்வமாக ட்ரைனிங் கொடுக்கிறார்கள். அவர்கள் நன்கு சொற்பொழிவு ஆற்றுகிறார்கள், ஆனால் அவர்கள் தியானம் செய்வதிலோ, ஆன்ம ஞானம் பெறுவதிலோ முனைப்பு காட்டுவதில்லை.

"நம் ஸ்தாபன கோயில்களில்,  'மினிஸ்டர்'கள் எல்லாவற்றிற்கும் மேலாக ஆன்ம ஞானம் பெற முக்கியத்துவம் தருகிறார்கள். நான் ஒருவரை 'மினிஸ்டர்' ஆக  நியமிக்கும் முன்னர், அவர் முன்ஜென்மத்தில் எவ்வளவு தூரம் ஆன்ம வளம் அடைந்துள்ளார் என்பதை அறிந்த பின் தான் அவரை நியமிப்பதுண்டு." கூறினார்.

மேலும் மிகுந்த தீவிரத்துடன்,

" இப்போது நம் ஸ்தாபன கோயில்களின் மூலம் ஒரு பெரும் மாற்றம் உருவாக உள்ளது. உண்மையான நாட்டம் உடையவர்கள் அங்கு செல்வார்கள். அக்கோயில்கள் ஒரு ஆன்மீக பரிசோதனைக் கூடம் போல இயங்கும். மக்கள் தான் கற்கும் போதனைகளை, அங்கு அவர்களின் வாழ்க்கை நடப்பில் ஒற்றிப் பார்த்து, எந்தக் கருத்து ஒத்துப் போகிறது, எந்தக் கருத்து ஒத்துப் போகவில்லை, எதனால் ஒத்துப் போகவில்லை? என்று ஆராய வழி வகுக்கிறோம். வழிவழியாக வழங்கி வரும் உணர்வு பூர்வமாக திணிக்கப் படும் மூட நம்பிக்கைகளை, அவர்கள் வாழ்க்கையில் ஆராயாமல் ஏற்றுக் கொள்ள வேண்டியதில்லை." என்ற ஒரு முக்கிய விஷயத்தை அவர் கூறினார்.  

‪#‎Conversations‬ with Yogananda 027 by Swami Kriyananda
Tamil Translation: D.l. Sivakumar


ஓம் தத் ஸத்

பிரம்மார்ப்பணமஸ்து.

No comments:

Post a Comment