Thursday, October 1, 2015

யோகானந்தரும், ஏசு கிறிஸ்துவும், மத மாற்றமும்!

ஓம்

யோகானந்தரும், ஏசு கிறிஸ்துவும், மத மாற்றமும்!

1. கல்கத்தாவில் பிறந்த ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தர் இந்துமத பிரதிநிதியாக 1920ஆம் ஆண்டு அமெரிக்காவிற்குச் சென்று அங்கேயே இருந்து அவருடைய கடைசி மூச்சு வரை (1952), நம் சனாதன தர்மம் (Eternal Religion) எனப்படும்  இந்து தர்மத்தைப் பரப்பியவர். சுவாமி சிவானந்தர், காஞ்சி பரமாச்சாரியார் போன்றோர் 'இவரை ஒரு உன்னத மகான் என்றும், இம்மாதிரி புருஷர்கள் உலகில் தோன்றுவது மிக அரிது என்றும், உலகில் மிகுந்த அவசியம் ஏற்படும் போது தான் இப்படிப்பட்ட உயர்ந்த மகான்கள் தோன்றுவர்' எனவும் கூறியுள்ளனர்.

2. நம் நாடு அடிமைப்பட்டுக் கிடக்கும் போது, அமெரிக்க தேச மக்களுக்கு (கிறிஸ்தவர்களுக்கு), கர்மத் தளையிலிருந்து விடுபட ராஜ யோகம், வேதாந்தம், தியானம், ஜபம், மந்திரம், பஜனை, என்று கனவிலும் எண்ணிப் பார்க்க முடியாத அளவு, நம் மத முக்கிய அம்சங்களை, மேலோட்டமாக அவர்களின் ரசனைக்கு ஏற்ப சிறிது மாற்றிப்,  புகுத்தியவர்.

3. இவர் Home Study Lessons மற்றும் பல்வேறு நூல்கள் மூலம் ஆன்ம, மன, உடல் வளம் ஒருங்கே கொடுக்கும், இந்து தர்மப் படி வாழும் கலைக் கல்வியை போதித்து, ஆயிரக்கணக்கான பேர்களை  உலகெங்கும் சென்றடைந்தார். அவர் ஆரம்பித்த SRF/YSS  நிறுவனங்கள், அவரின் சீடர்கள் (120 சீடர்கள் அவர் உடலை விட்டு பிரியும்போது இருந்தனர்) நிறுவிய Ananda போன்ற சமூகங்கள் மூலம் இடையறாமல் லட்சக்கணக்கானோர் இன்றும் பயன் பெற்று வருகின்றனர். குறிப்பாக, இவர்களில் பெரும்பான்மையோர் இந்துமதம் அல்லாதவர்கள். ஆனால், ஸ்ரீ யோகானந்தரின் போதனையின் மூலம், இவர்கள் இந்துமதத்தை நம்மை விட அதிகம் நேசிப்பவர்கள்!

4.  அவர் பரமகுருவின் குருவான "மகாவதார்" பாபாஜீயும்,  ஏசு கிறிஸ்துவும் கலந்து பேசி, அவர் அமெரிக்காவிற்கு சென்று கிரியா யோகத்தைப் பரப்பவும், சர்ச்சின் பிடியில் இருக்கும் உண்மையான கிறிஸ்தவ போதனைகளை புனருத்தாரணம் செய்யவும், தெய்வக் கட்டளையாக அனுப்பியுள்ளனர். அதற்கேற்ப அவர் பைபிளில் உள்ள ஏசு கிறிஸ்துவின் ஒவ்வொரு கருத்துக்கும் இந்து தர்ம கோட்பாடுகளுக்கும் (குறிப்பாக பகவத்கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர் சொன்ன போதனைக்கும்) முரண் ஒரு சிறுதும் கூட இல்லை என்று வாழ்நாள் முழுதும் போதித்து, எழுதியுள்ளார்.

5. அவர் எழுதிய 1000 பக்கங்களுக்கும் மேலான "The Second Coming of Christ" என்னும் படைப்பில் பல 'புரட்சிகரமான' (குறிப்பாக கிறிஸ்தவ சர்ச், மத மாற்றம் போன்றோர் வயிற்றில் புளி கரைக்கும் வண்ணம்) பல கருத்துக்களை, உண்மையை நாடும் கிறிஸ்தவர்கள் ஏற்கும் வண்ணம், விவரித்துள்ளார். அவற்றில் சில:
- ஏசு கிறிஸ்து (~14 - 27 வயது வரை) இந்தியாவில் பாடம் பயின்றது.
- நம் இந்து குருமார்கள் கிறிஸ்து பிறக்கும் சமயம் விஜயம் செய்தது.
- Holy Trinity (Holy Ghost, Son, Father) =  "ஓம் தத் ஸத்"; Amen = Aum/Om
- Christ Consciousness = Krishna Consciousness = Universal Consciousness (பரமாத்மா)
- மறுபிறப்புக் கொள்கையை கிறிஸ்துவின் வாசகங்களிலேயே எடுத்துச் சொன்னது. 
- ஏசு கிறிஸ்து ஒரு பெரும் யோகி மற்றும் ஒரு அவதார புருஷர். அவர் கூறிய கருத்துக்கள் எல்லாமே இந்து தர்மத்தில் உள்ளவையே.
- ஏசு கிறிஸ்து மட்டுமே "The Only Son of God" அல்ல. மற்ற அவதார புருஷர்களுக்கும் இடம் உள்ளது.
ஸ்ரீ யோகானந்தர் ஏசு கிறிஸ்துவை மிகவும் நேசித்தார். அவருக்கு ஸ்ரீ கிருஷ்ணரும், கிறிஸ்துவும் இரு கண்களைப் போல! ஆனால், சர்ச் செய்த திரிபுகளையும், அவர்களின் பணபலத்தால் தகாதமுறையில் செய்யும் மத மாற்றத்தை நன்கு சாடியுள்ளார். 'கிறிஸ்து ஒருமுறை தான் சிலுவையில் அறையப் பட்டார், ஆனால் அவரின் போதனைகள் தினசரி சர்ச் போதகர்களினால் சிலுவையில் அறையப் படுகிறது.' என்று ஹாஸ்யமாக விசனப் பட்டுள்ளார்.  இந்த புத்தக்கத்தைப் படித்தால், இந்த ஜென்மத்தில் மட்டுமல்ல, பின்வரும் எந்த ஜென்மத்திலும் கிறிஸ்தவ மதம் மாற வேண்டும் என்ற எண்ணம் தோன்றாமல் ஆகி விடும். அதில் ஏதாவது புதிதாக இருந்தால் தானே அந்த எண்ணம் வருவதற்கு!

6. மத மாற்றம் என்பது கடவுளைக் கூறு போடும் ஒரு சாத்தானின் கருவி! இந்து மதத்தின் கோட்பாடு மத இணக்கம், மத மாற்றம் அல்ல. ஸ்ரீ யோகானந்தரின் உன்னத செயல் என்னவென்றால் அவர் மத இணக்கத்தை நடைமுறையில், குறிப்பாக அவர்கள் 'பேட்டையிலேயே' புகுந்து, கொண்டு வந்தது.

1 மத இணக்கம் பெற்றவர் = 1000 மத மாற்றப்பட்டவர்கள்

ஏனென்றால், மேலே கூறியது போல ஒரு மத இணக்கம் பெற்றவரின் சொந்தபந்தங்கள், சந்ததிகள் அனைவரையும் அந்நபரின் செயல்பாடு, கருத்துக்கள் தாக்கம் செய்யும். மத மாற்றம் செயப்பட்டவர் தெளிந்து ஒருக்கால் மத இணக்கம் பெறலாம், ஆனால் மத இணக்கம் பெற்றவர் மத மாற்றம் அடையவே முடியாது.

7. நாம் மத இணக்கம் பெறுவது (இந்து சமயத்திற்கு இது புதிதல்ல - ஸ்ரீ ஆதி சங்கரர் 'ஷண்மதங்களான', [சைவம், வைஷ்ணவம், சாக்தம், சௌரம் - சூரியன், கௌமாரம், காணபத்தியம்] அறுவகைச் சமயத்தை இந்து மதத்தில் சீர்ப்படுத்தி ஒருங்கிணைத்தவர்) தான் மத மாற்றத்தைத் தடுக்கும் ஒரே பிரம்மாஸ்திரம்.  நாம் இந்து மதத்தில் இருந்து இழந்தவர்களைத் திரும்பப் பெறவும் இது ஒன்றே வழி!

ஒரு வேண்டுகோள்: புதுமையை நாடி விரும்பும் நம் இளைய சமுதாயத்திற்கு, வறுமையால் பாதிக்கப் பட்டவர்களுக்கு (மத மாற்றம் செய்வோரின் Target) மேலே கூறியது போல, மத இணக்கத்திற்கான அறிவை வளர்க்க வேண்டும். 'கிறிஸ்து' பேர் கேட்டாலே அரண்டு மிரளாமல், அதில் உள்ள கருத்துக்களை அறிந்து தம்மைத் தயார்படுத்திக் கொண்டால், மத மாற்றப் பேய்கள் நம்மைக் கண்டு மிரளும்! :-)

பிரேமம் லோகத்தில் என்றும் பரவ,
பரமஹம்ஸ தாஸன் (D.L. Sivakumar)

PS: அமெரிக்காவில், குறிப்பாக Scientific, Engineering, community யில் இப்போது இந்து மதத்திற்கு என்று ஒரு மரியாதை இருக்கின்றது. நம் PM திரு. மோடி அவர்களின் சமீப விஜயத்தின் (Facebook meeting with Mark Zuckerberg) போது மார்க் குறிப்பிட்ட மறைந்த ஆப்பிள் நிறுவனர் (Steve Jobs) அவரின் கடைசி ஆசையாக ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தர் எழுதிய "Autobiography of a Yogi" என்ற நூலை அவர் இறுதிச் சடங்கில் கலந்து கொள்பவர்களுக்குத் தருமாறு செய்வித்தார். அந்த ஒரு நூல் மட்டுமே அவரின் iPod ல் இருந்தது என்றும், அதை அவர் வருடாவருடம் தன் முன்னேற்றத்திற்கு படித்து வந்ததாகக் கூறியுள்ளார். ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தர் "Father of Yoga in the West" என்று சகல வல்லுனர்களாலும் போற்றப் படுகிறார். இத்தகைய மரியாதைக்குரியவரை நம்மவர்கள் தூற்றுவது சிறுபிள்ளைத் தனமே!

  

No comments:

Post a Comment